INDIA

தமிழக உழவர் சந்தைகளில் புதிய அம்சம் – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!

[ad_1]

தமிழக உழவர் சந்தைகளில் புதிய அம்சம் - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
தமிழக உழவர் சந்தைகளில் புதிய அம்சம் – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
தமிழக உழவர் சந்தைகளில் புதிய அம்சம் – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!

தமிழகத்தில் தோட்டக்கலை துறை இயக்குநரகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளார்.

ஆய்வுக் கூட்டம்:

தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறியது. இதனால் மக்கள் அன்றாட உணவுக்கு காய்கறிகளை வாங்க முடியாமல் தவித்தனர். குறிப்பாக தக்காளியின் விலை ரூ.100 ஐ தாண்டியது. இதனால் சாமானிய மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் அரசு ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய முன் வந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தோட்டக்கலை துறை இயக்குநரகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

See also  தமிழக மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடையாது? அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download

தமிழ்நாட்டில் உழவர் சந்தை என்கிற கனவுத் திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 180 உழவர் சந்தைகள் உள்ளது. இதில் 172 உழவர் சந்தைகள் செயல்பாட்டில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரி வரவு 1866 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து உள்ளது. நாள் ஒன்றுக்கு காய்கறி மற்றும் பழங்கள் வரத்தின் மதிப்பு ரூ. 5.99 கோடியாக உள்ளது. பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கை 7,219, நாள் ஒன்றுக்கு பயனடையும் நுகர்வோர்களின் எண்ணிக்கை 2.95 லட்சம் ஆகும். இன்று நடைபெற்ற கூட்டத்தில் உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் காய்கறி சாகுபடியினை அதிகப்படுத்திட தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

See also  சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - கோவில் நடை திறப்பு!

மதுரையில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் கிராமங்களுக்கு சென்று காய்கறிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். , உழவர் சந்தைகள் விற்பனை மையமாக மட்டுமின்றி, உழவர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத் தகவல் பரிமாறும் மையமாக செயல்படுவது குறித்து அமைச்சர் அறிவுரை வழங்கினார். விவசாயிகளின் நலனுக்காக, உழவர் சந்தைகளில் மாதமிருமுறை விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளில் மின்னணு தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் படிப்படியாக இந்த வசதி அனைத்து உழவர் சந்தைகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

See also  சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு! - ExamsDaily Tamil

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button