சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
[ad_1]
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
பக்தர்களுக்கு அனுமதி:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை நடைபெற இன்னும் 12 மணி நேரமே உள்ள நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையை எதிர்த்து பக்தர்களுக்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்துள்ளனர். அதாவது நாளை (ஆக.4) நடைபெறவிருக்கும் விழாவிற்கு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
ஆதார் கார்டில் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
நாளை காலை நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறவும் உள்ளது. அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிலத்தில் விளைவிக்கப்பட்ட நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். மேலும், அங்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் முன்பு பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். ஆனால் இம்முறை அதற்க்கு சாத்தியமில்லை என பத்தினம் திட்டா கலெக்டர் திவ்யா எஸ் அய்யர் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அவர் கூறியதாவது, ஆகஸ்ட் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, உயர்தரப் பகுதிகளுக்கு இரவுப் பயணம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், நிரபுத்தரி திருவிழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், தற்போது பத்தனம்திட்டா பகுதியில் பலத்த மழை பெய்ததால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.
[ad_2]
Source link